Sunday, February 21, 2010

இது எப்படி இருக்க

வேலு ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது மைனா
ஒன்றை வளர்த்து வந்தான். எப்பொழுதும் அதனுடனே விளையாடிக்கொண்டிருப்பான். அதன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தான். ஒரு நாள் பள்ளியிலுருந்து திரும்பியதும் அவன் தாய் மைனா இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஒன்றும் கூறாமலே சென்ற வேலு தனது வீட்டுப்பாடத்தை முடித்ததும் இறந்து கிடந்த மைனாவை பார்த்து அழுது புழம்பினான். இதைப்பார்த்து ஆச்சர்யமுற்ற அவன் தாய் ஏம்பா மைனா செத்துபோச்சுன்னு வந்தப்பேவே சொன்னனே அப்ப அழாம இப்ப அழுகிறன்னு கேட்டாங்க. அதற்க்கு வேலு சொன்னான் நீ மைனா செத்துப்போச்சுன்னா சொன்ன! எனக்கு நைனா செத்துப்போச்சுன்னு இல்ல கேட்டுச்சு.







வேலு அப்போது L K G படிக்கும்போது ஒரு நாள் பள்ளிக்கு நேரமானதனால அவசரமாக அவனை தயார்படுத்திட்டு அவனை வன்டியில ஏத்திவிட்டு சொன்னாங்க
வேலு!... ஹாய் சொல்லு...
ஆய்...
ஆய் இல்லப்பா ஹாய்....
ஹாய் இல்லம்மா எனக்கு இப்ப ஆய்....

No comments:

Post a Comment